Saturday 4th of May 2024 02:33:06 PM GMT

LANGUAGE - TAMIL
-
யாழ்.பல்கலையின் கிளிநொச்சி வளாகத்தில் உள்ள புத்த விகாரை மீது தாக்குதல்!

யாழ்.பல்கலையின் கிளிநொச்சி வளாகத்தில் உள்ள புத்த விகாரை மீது தாக்குதல்!


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புத்த விகாரை அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக அருவியின் பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

ஏற்கனவே,

பல்கலைக்கழக வளாகத்தில் இந்து ஆலயம், பள்ளிவாசல், கத்தோலிக்கத் தேவாலயம் என்பன கொட்டில்களில் காணப்படுகின்ற நிலையில் புத்த விகாரை பல இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டு கொரோனாக் காலத்திலும் வழிபாடுகள் இடம்பெற்றுவந்திருந்தமை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை தெரிந்ததே.

இதேவேளை, கடந்தவாரம் யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் காணப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி பல்கலைக்கழக நிர்வாகத்தினால் இடிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE